தெரிகிறதா உனக்கு...

காதலே! போதும்- 
இனி தென்றலாய் மாறி 
என் தேகம் தழுவாதே!!! 
உன்னில் அடிபடும் , 
சருகாய் 
பட்ட காயம் ; 
இன்னும் வலிக்கிறது
எனக்கு... 

பூவாய் உன்னை நினைத்தேன் - 

நீ புயலாய் மாறியது ஏனடா??? 
எனக்கே தெரியாமல் - நீ 
என்னுள், எப்படி நுழைந்தாய்??? 
நான் உன்னுள் புதைந்து , 
சிக்கி தவித்து , 
சின்னாபின்னம் ஆகிறேன். 
தெரிகிறதா அது உனக்கு???

யாமிதாஷா

No comments:

Post a Comment

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...