வருவாயா???

அன்று உன்னை கண்ட பின்;
காதல் என்றால்
என்னவென்று நான் உணர்ந்தேன்...
அதிலுள்ள வலியையும்;
ஆசை தாகமும் நான்அறிந்தேன்...

நின் நியாபகங்களில் தேனொழுக; 

நான் மிதந்தேன்!!!
ஒவ்வொரு நொடியும் சாகிறேன்;உன்
தீராத ஞாபகத்தில் வேகிறேன் ...

என் கண்ணீரின் பெரு மழையால்;
நான் கண்ட கனவுகள் அழிகின்றன...
பிரிந்த பாரம் சுமந்து; இன்னும்
நீ வருவாயென காத்திருக்கிறேன்... 
   


யாமிதாஷா...    
    

No comments:

Post a Comment

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...