காதல் தின ரோசா...


காத்திருக்கேன்,காத்திருக்கேன் 
கண்ணாலே காதல் சொல்லி 
கண்ணாலமும் பண்ணிகிட்ட 
என் பட்டிக்காட்டு மாமாவுக்கு;;; 
பந்தியிலே அமர வச்சு
பக்குவமா சேதி சொல்ல!
வச்ச கண்ணு வாங்காம
நீ வரும் பாதைய
பாத்திருக்கேன்,,,
சந்தையில கூவி கூவி
தங்கம் விலை
சொல்லி சொல்லி,,,
நாம நட்டு வச்ச
ரோசாவெல்லாம்
துட்டு போட்டு விக்கிறாங்க;
கேட்டாக்க ,,,
பட்டணத்துல
காதல் சொல்ல
காசு வேணுமாம்,,,
கூடவே கை நிறைய
ரோசும் வேணுமாம்...



3 comments:

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ
விட்டிருக்கிறேன் வரிகள் வடிவில்...